இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4200 தர ஊதியம் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், முறையற்ற மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வினை எதிர்த்து வருகிற 29ம் தேதி திங்கட்கிழமை 11மணியளவில்
சென்னை டி.பி.ஐ வளாகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment