FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சிறந்த வகுப்பறை நடைமுறைகள்: ஆராய்ச்சி கட்டுரைக்கு அழைப்பு


சிறந்த வகுப்பறைக்கான நடைமுறைகள் குறித்து ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்க ஆசிரியர்களுக்கு, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில்,
21-ம் நுாற்றாண்டில் சிறந்த வகுப்பறைக்கான நடைமுறைகளை கையாள்வது குறித்த கருத்தரங்கம் டிச.18, 19 ல் சென்னை பள்ளி கல்விஇயக்குனரகத்தில் நடக்க உள்ளது. இதற்காக ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்க ஆசிரியர்களுக்கு அறிவிப்பு செய்துள்ளனர்.
21-ம் நுாற்றாண்டில் சிறந்த வகுப்பறை நடைமுறை,

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 4 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் நீதிமன்றம் புதிய உத்தரவு


 GO 71 மற்றும் GO 25 ஆகியவற்றை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தனர் இதில்  67 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தமிழக அரசு 4 வாரகாலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் இறுதி தீர்ப்பை பொறுத்து பணிநியமனங்கள் அமையவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PG-TRB ; முதுகலை ஆசிரியர் நியமனத்தில் ‘பாஸ்’ மார்க் நடைமுறை அமல்: ‘ஃபெயில்’ ஆனவர்கள் ஆசிரியராக முடியாது


அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப் படவுள்ளது.
அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு என்பது பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வில் இருந்து வேறுபட்டது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால்தான் ‘பாஸ்’ செய்ய முடியும். போட்டித் தேர்வுகளில் அதுபோல கிடையாது. காலியிடங் கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மதிப்பெண் வரிசைப்படி ஆட்களை தேர்வு செய்வார்கள். அந்த கட்ஆப் மதிப்பெண் என்பது தேர்வுக்குத் தேர்வு மாறக் கூடியது.

இந்நிலையில், தற்போது முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பாஸ் மார்க் எவ்வளவு?

அதன்படி, பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 50% மதிப்பெண், எஸ்சி வகுப்பினர் 45% மதிப்பெண், எஸ்டி வகுப்பினர் 40% மதிப்பெண் எடுத்தாக வேண்டும். இந்த மதிப்பெண் எடுத்து ‘பாஸ்’ செய்தவர்கள் மட்டுமே

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் தற்போது 6, 7, 8 வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பட்டதாரி பதவி உயர்வு சார்பாக பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் தமிழக முதல்வர் அவர்களுக்கு அளித்த விளக்கம் - சார்பு

ஊக்க ஊதியத்தால் ஏற்படும் மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாட்டை ஊதிய நிர்ணயம் செய்யும் அலுவலரே ஊதிய முரண்பாட்டை களையலாம். என நிதித்துறை சார்புச்செயலாளரிடம் இருந்து பெறப்பட்ட ஆ.டி.ஐ. தகவல்.

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 and 2014-2015

 

தேர்வு நாள் : 10.01.2015
விண்ணப்பிக்க கடைசி நாள் :26.11.2014
விண்ணப்ப விநியோகம் தொடக்கம் :10.11.2014
விண்ணப்ப கட்டணம் :ரூபாய் .500.
பாட வாரியாக காலிப்பணியிட விவரம்
Tamil. -277
English -209
Maths -222
Physics -189
Chemistry -189
Botany -95
Zoology -89
History -198
Economics -177
Commerce -135
Phy.Director Gr.I -27.
Total- 1807.

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015



Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015
          


Dated:07-11-2014

Member Secretary

காலாண்டு தேர்வு மதிப்பீட்டு பணிகள் தீவிரம்


மாவட்ட பள்ளிகளில், காலாண்டு தேர்வு முடிவுகள் குறித்த மதிப்பீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில், படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக் கல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாலை நேர சிறப்பு வகுப்புகள், வழிகாட்டி கையேடுகள், பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி, கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் மீது சிறப்பு கவனம் என பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
அடுத்த கட்டமாக, ’காலாண்டு தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவாக பெறும் பள்ளிகளின் மீதும், தலைமையாசிரியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மதிப்பீட்டு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
மதிப்பீட்டு பணிகள் நிறைவு பெற்றதும், தேர்ச்சி விகிதம் குறைவு, மாணவர்கள் மதிப்பெண் குறைந்ததற்கான காரணம்

பள்ளி பாட புத்தகம் மாயமான வழக்கில் முதன்மை கல்வி அலுவலக பதிவு எழுத்தர் சஸ்பெண்ட்


கோவையில், 350 டன் பள்ளி பாட புத்தகம் மாயமான வழக்கில், முதன்மை கல்வி அலுவலக பதிவு எழுத்தர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்க, 2011ம் ஆண்டு, சமச்சீர் கல்வி அல்லாத 350 டன் பழைய பாட திட்ட புத்தகங்கள் மாயமாகின. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், பாட புத்தகங்கள் மாயமானதில், முறைகேடு நடந்ததை கண்டுபிடித்தனர்; சி.இ.ஓ., ராஜேந்திரன், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, கோவை மாவட்ட குற்றப்பிரிவு

பிளஸ் 1 வகுப்பு: அடுத்த கல்வியாண்டிலும் புதிய பாடத் திட்டத்துக்கு வாய்ப்பில்லை


பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் திணறி வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டிலும் (2015-16) பிளஸ் 1 வகுப்புக்கான பழைய பாடத் திட்டம் மாற்றப்படாது எனத் தெரிகிறது.
பிளஸ் 1 வகுப்புக்கு 2014-15-ஆம் கல்வியாண்டிலும், பிளஸ் 2 வகுப்புக்கு 2015-16-ஆம் கல்வியாண்டிலும் பாடத் திட்டங்களை மாற்ற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், பல்வேறு காரணங்களால் இது தள்ளிப்போனது. பிறகு, பிளஸ் 1 வகுப்புக்கு 2015-16-ஆம் ஆண்டிலிருந்தும், பிளஸ் 2 வகுப்புக்கு 2016-17-ஆம் ஆண்டிலிருந்தும் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான போட்டி எழுத்து தேர்வு 10.01.2015 அன்று நடைபெறவுள்ளது I விண்ணப்பங்கள் 10.11.2014 அன்று காலை 10மணி முதல் விற்பனை செய்யப்படவுள்ளது I இதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடவுள்ளது I


ஆசிரியர் தேர்வு வாரியம் ந.க.எண்.9287/அ3/2014 நாள்.05.11.2014ன் படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான (2013-14 மர்றும் 2014-15) போட்டி எழுத்து தேர்வு 10.01.2015 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 09.11.2014க்குள் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

விண்ணப்பங்கள் 10.11.2014 அன்று காலை 10மணி முதல் உரிய மையங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிக்கை ஆசிர்யர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடவுள்ளது

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 144 சிறுபான்மை மொழி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நியமன கலந்தாய்வு 08.11.2014 அன்று இணையதள வாயிலாக நடைபெறவுள்ளது

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 144 சிறுபான்மை மொழி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நியமன கலந்தாய்வு 08.11.2014 அன்று இணையதள வாயிலாக நடைபெறவுள்ளது.

BHARTHIAR UNIVERSITY List of Candidates Provisionally selected for M.Ed. Admission (2014-16)

 
List of Candidates Provisionally selected for M.Ed. Admission (2014-16)
More Details -> Click here to View
 
Provisional Waiting List for M.Ed. Admissions (2014-16)
More Details -> Click here to View

தொடக்க கல்வித்துறை : 8ம் தேதி சிறுபான்மை ஆசிரியர் நியமன கவுன்சலிங்


தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர் கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கோப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அறிவுரைகளை உடனுக்குடன் அமல்படுத்துவதையும் அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா உத்தரவு

 

அடுத்தாண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்?


அடுத்தாண்டு முதல், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
 
ஒரு கல்வி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இதுகுறித்து கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு விரைவில் தொடங்கும். கல்விக் கொள்கையில், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் மட்டுமே பங்களித்தால் போதாது, பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களும்
கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்
கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (ஏ.இ.இ.ஓ.) ஒன்றிய வாரியாக தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்
பள்ளிகளை நிர்வகிக்கின்றனர். பள்ளிகளை ஆய்வு செய்வது, மாணவர்களின் கல்வி நிலை மற்றும் அரசு நலத்திட்டங்களின்
செயல்பாடுகளை கண்காணித்தல், ஆசிரியர்களின் சம்பளம், அட்வான்ஸ், லோன் போன்றவற்றுக்கு ஒப்புதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி தேசிய கொடிக் கம்பத்தில் சமுதாயக் கொடி


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி தேசிய கொடிக்கம்பத்தில் சமுதாயக் கொடியை சிலர் ஏற்றிச் சென்றதையடுத்து இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, சுந்தரபாண்டியம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக குருவையா என்பவர் உள்ளார்.

தேவர் ஜயந்தி (அக்டோபர் 30) அன்று இரவு பள்ளியின் தேசியக் கொடிக்கம்பத்தில் சிலர் மஞ்சள்-பச்சை நிறமுடைய குறிப்பிட்ட ஒரு சமுதாயக் கொடியை ஏற்றிச் சென்றுள்ளார்கள். 31-ம் தேதி காலையில் பள்ளியின் அலுவலக உதவியாளர் கொடியைப் பார்த்து கழற்றி தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளார். ஆனால்

12-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் டிஸ்மிஸ், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் நடவடிக்கை


 
மதுராந்தகம் அடுத்த சூணாம்பேடு மேல்நிலைப் பள்ளியில், தவறான நடத்தை காரணமாக 12-ம் வகுப்பு படித்து வந்த 5 மாணவர்களை மாவட்ட கல்வி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது. பள்ளியில் படிக்கும் சக மாணவர்களின் நலன்கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சூணாம்பேடு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்கள் 5 பேர், சக மாணவ, மாணவிகளிடம் தவறான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் அந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த மாணவர்கள் தொடர்ந்து

தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது


தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, 4ஆம் தேதி மதுரை வந்த தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் மற்றும் இயக்குநர் அறிவொளியிடம் நேரில் கேட்டபோது, ''அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - கல்வியாண்டின் இடையில் வயதுமுதிர்வு காரணமாக ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதிவரை மறு நியமனம் வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

ஐந்தாம் வகுப்பிற்கான இரண்டாம் பருவ ஆங்கில பாடங்கள் ஆடியோ வடிவில்

Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges 2012

அங்கீகாரமற்ற படிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்: யு.ஜி.சி. அறிவுறுத்தல்


அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளின் கல்வி மையங்கள் என்ற பெயரில், செயல்படும் நிறுவனங்கள், அங்கீகாரமில்லாத படிப்புகளை நடத்துவதால், அவற்றை நம்ப வேண்டாம் என, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
 
அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகள், கல்லூரிகள் என, எந்த கல்வி நிறுவனமாக இருந்தாலும், அதற்கான அங்கீகாரம், பாடங்களுக்கான அனுமதி என அனைத்தும் யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன.

நாடு முழுவதும் செயல்படும், பல்கலைகள், அவை அனுமதி பெற்றுள்ள வரம்பிற்குள் மட்டுமே, கல்வி வளாகங்கள்,

வினா–விடை புத்தகம்: 10–ந்தேதி முதல் விற்பனை - இயக்குனர்


பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு மாநில பெற்றோர்–ஆசிரியர் கழகம், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ–மாணவிகள் பயன்பெறும் வகையில் வினா–வங்கி, மாதிரி வினா–விடை புத்தகங்களை ஆண்டுதோறும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டும் விற்பனை செய்ய உள்ளது.பிளஸ்–2 மாணவர்களுக்கு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் ஒவ்வொரு பாட வரிசைக்கும் ரூ.25 முதல் ரூ.95 வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 3 புத்தகங்கள் கொண்ட ஒரு தொகுப்பின் விலை ஆங்கில வழி ரூ.200–ம், தமிழ் வழி ரூ.205–ம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும்

10th & 12th Exam: பாடத் திட்டத்திற்குவெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும் - தமிழக அரசுக்குபரிந்துரை


மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : 

பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரைபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக் கூடாது. 


பாடப் பொருள் சார்ந்து, அதே நேரத்தில், பாடத் திட்டத்திற்கு வெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும்' என, தேர்வு சீர்திருத்தக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சீர்திருத்தம் குறித்து ஆய்வு : பொதுத்தேர்வு விதிமுறைகள் மற்றும் கேள்வித்தாளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க, சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) முன்னாள் தலைவர், பாலசுப்ரமணியன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், கல்வித் துறை இயக்குனர்கள் உட்பட,

அரசு பள்ளி பணிக்கு கலப்புத் திருமணம் தம்பதியருக்கு முன்னுரிமை வழங்க கோரி வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு


சென்னை ஐகோர்ட்டில், சேலத்தை சேர்ந்த கே.அழகேசன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 
இந்திய கலப்புத் திருமணம் தம்பதியரின் சங்கத்தின், தலைவராக உள்ளேன். 

வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டியபிரிவினர் குறித்த பட்டியலில், போரில் ஊனமடைந்த ராணுவ வீரர்கள், மரண மடைந்த வீரர்களின் வாரிசுகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினர்களின் பெயர்கள் உள்ளது.தமிழக அரசு கடந்த 1976ம் ஆண்டு டிசம்பர் 28ந் தேதி வெளியிட்ட அரசாணையின்படி, எஸ்.சி., எஸ்.டி. சாதியை சேர்ந்தவர்களை கலப்புத் திருமணம் செய்துக் கொண்ட தம்பதியரின் பெயரையும் சேர்த்துள்ளது.எனவே, கலப்புத் திருமணம் செய்துக் கொண்ட தம்பதியருக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆனால், இவர்களுக்கு

மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரை


'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக் கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதே நேரத்தில், பாடத் திட்டத்திற்கு வெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும்' என, தேர்வு சீர்திருத்தக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சீர்திருத்தம் குறித்து ஆய்வு : பொதுத்தேர்வு விதிமுறைகள் மற்றும் கேள்வித்தாளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க, சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) முன்னாள் தலைவர், பாலசுப்ரமணியன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், கல்வித் துறை இயக்குனர்கள் உட்பட, பலர் இடம் பெற்று உள்ளனர். செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து, ஏற்கனவே பல
கூட்டங்களை நடத்தி, வரைவு அறிக்கை மற்றும் பரிந்துரை அறிக்கையை, பாலசுப்ரமணியன் குழு தயாரித்து

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்

 

 
 




விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  http://tamilcomputertips.blogspot.com/2010/04/blog-post_19.html ஆனால் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு இந்த மென்பொருள் சில சமயம் சரியாக இயங்குவது இல்லை. இதனால் பல நண்பர்கள் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில்  தமிழில் எழுத்த மிகவும் சிறமப்படுகிறார்கள்.

5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை விதித்துள்ளது.


5% மதிப்பெண் தளர்வு மூலம் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ள  திரு பாரதி ராஜா என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றுள்ளார். தற்போது பாண்டிச்சேரி அரசு வெளியிட்ட SC ST ஆசிரியர் பட்டியலில் 90க்கு மேல் பெற்றவர்களை கொண்டு ஆசிரியர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு இருந்தது.
மேலும் 90 க்கு மேல் பெற்றவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். இதனால் ஆசிரியர் நியமனத்தில் தமிழ் நாடு அரசை பின்பற்றும் பாண்டிச்சேரி அரசு வெளியிட்ட  பட்டியலில் 5% மதிப்பெண் தளர்வுடன் இல்லை. எனவே இந்த பணியிடங்களுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் பாண்டிச்சேரி பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றிற்கு   பணியிடங்கள் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது

ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் 'சிம் கார்டு' பெறலாம்


ஆதார் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே, இனி, 'சிம் கார்டு' வழங்க வேண்டும்' என, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.மத்திய தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது:

இனிமேல், 'சிம் கார்டு' கேட்டு, வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும் போது, அவர்களின் ஆதார் அடையாள அட்டை நகலை கேட்டு வாங்க வேண்டும். விண்ணப்பத்தில், கட்டாயமாக ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், தங்கள் தகவல் தொகுப்புகளில் (டேடா பேஸ்) வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். இந்த மாற்றத்தை, இரண்டு மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

தமிழகம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகைக்கு விரைவில் புதிய முறை: பள்ளிக்கல்வித்துறை முடிவு


முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க விரைவில் புதிய முறையைக் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித்தகுதி பெற்றால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் (இன்சென்டிவ்) வழங்கப்படு கிறது. இவ்வாறு ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் அதிக பட்சம் 2 ஊக்க ஊதியங்கள் பெறலாம்.

அந்த வகையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்எட் பட்டம் பெற்றிருந்தால் அதற்கு ஓர் ஊக்க ஊதியமும், எம்பில், பிஎச்டி, பிஜிடிடிஇ (ஆங்கில பயிற்சியில் முதுகலை பட்டயம்)-இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு இன்னொரு ஊக்க ஊதியமும் பெறத் தகுதியுடையவர் ஆவர்.

நேரடியாக முதுகலை பட்ட தாரி ஆசிரியர் பணியில் சேரு வோர் தொலைதூரக்கல்வி மூலம் எம்எட் முடித்துவிட்டு முதல் ஊக்க ஊதியத்தைப் பெற்றுவிடுவர்.

தற்போது தொலைதூரக்கல்வி மூலம் எம்எட் படிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்துவிட்டது. ஒரு சில பல்கலைக்கழகங்களே அதுவும் குறைந்த நபர்களையே எம்எட் படிப்புக்கு சேர்க்கின்றன. இந்த சூழ்நிலையில், அவர் களுக்கு 2 ஊக்க ஊதியங்கள் வழங்குவதற்கு எம்பில், பிஎச்டி, பிஜிடிடிஇ படிப்புகள்-இவற்றி லேயே இரு படிப்புகளை கணக் கில்கொள்ள பள்ளிக்கல்வித் துறை முடிவுசெய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, மேற் கண்ட கல்வித்தகுதிகள் உடைய முதுகலை பட்டதாரி ஆசிரியர் களின் பட்டியலை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அதி காரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித் துள்ளார்.

தொலைநோக்கி மூலம் படம்பிடிக்கப்பட்ட சூப்பர்நோவா

 


    
altமுந்தைய காலத்தில் ஏற்பட்ட சூப்பர்நோவாவை சீன விஞ்ஞானிகள் 185எடி யில் பார்த்துள்ளனர், ஆனால் தற்போது நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவதை (சூப்பர்நோவா) ஒரு தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. எரிக் கோல்ஸ் என்ற ஒரு மனிதரின் வீட்டுத் தோட்டத்தில் வைத்துள்ள தொலைநோக்கியில் இந்த வியக்கத்தக்க சூப்பர்நோவா புகைப்படங்கள் பதிவாகியுள்ளது. 70 வயதுடைய வேதியியல் ஆய்வாளரான எரிக் கோல்ஸ், ஜந்து தொலைநோக்கியில் வெவ்வேறு ஃபில்டர்களை உபயோகித்ததன் மூலம் அருகிலுள்ள நட்சத்திரங்களிலிருந்து ஆற்றலை உறிஞ்சும் வெவ்வேறு வாயுக்களின் வடிவங்கள் மற்றும் படிமங்களை கண்டறிந்துள்ளார்.

சூப்பர்நோவா என்பது ஒரு நட்சத்திரம் அதன்

எளிய முறையிலான சித்த மருத்துவ குறிப்புகள்

 

    
 
altநமது தினசரி உணவு பழக்கத்தில் சில பழங்கள் மற்றும் பொருட்களை சேர்ப்பதன் மூலம் நோயற்ற ஆரோக்கிய வாழ்வை பெறலாம்.

கல்லீரல் பலப்பட ... தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து மிக்கது.

ரத்த அழுத்தம் சரியாக.... டீ, காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராகும்.

இதயத்திற்கு பலம் கிடைக்க: மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.

அத்திப்பழம் தேனில் ஊற வைத்து

மெட்ராஸ் ஐ ரகசியங்கள் தெரியணுமா

 


        
altமெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி. ’கஞ்சங்டிவிடிஸ்’ எனப்படும் ஒருவித கண் நோய்தான் ’மெட்ராஸ் ஐ’ ‘பிங்க் ஐ’ என செல்லமாக அழைக்கப்படுகிறது.

மெட்ராஸ் ஐ என எப்படி பெயர் வந்தது? இந்த நோய்கான காரணம் முதன்முதலாக சென்னையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் இந்த கண் நோய்க்கு இப்பெயர் வந்தது. 1918-ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை சென்னை  மருத்துவமனையில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக இருப்பது ‘அடிநோ’ வைரஸ் எனும் கிருமி என கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிடப்பட்டது.

அதிகரிப்பு!! - கல்வித்துறைக்கு எதிரான வழக்குகள் எண்ணிக்கை- த.ப.ஆ.கூட்டமைப்பின் பொது செயலர் அறிக்கை


தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி உடைகிறது



. கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் த.மா.கா.வை தொடங்குகிறார். இதுபற்றி அவர் நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜி.கே.மூப்பனார், கடந்த 1996-ம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

காங்கிரசில் இணைந்த த.மா.கா


அப்போது நடந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூப்பனார் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து வெளியேறி த.மா.கா.வை தொடங்கினார். அந்த தேர்தல்களில் த.மா.கா., தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.

கல்வித்துறைக்கு எதிரான வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு: நிலுவையில் 2,000 வழக்குகள் இருப்பதால் சிக்கல்


பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி துறைக்கு எதிராக, வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்களால், 2,000த்திற்கும் மேற்பட்ட வழக்குகள், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அரசு ஊழியர், 12 லட்சம் பேரில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர், கல்வித்துறையில் பணி புரிகின்றனர். பெரிய துறையாக, பள்ளி கல்வித்துறை இருப்பதாலோ என்னவோ, வழக்குகளுக்கும் பஞ்சம் கிடையாது.

வழக்குகள் எண்ணிக்கை :


பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பணிகளைக் கூட, மாவட்ட கல்வி அதிகாரிகள், சரியாக செய்வதில்லை என, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இதன் காரணமாக, நாளுக்கு, நாள், கல்வித்துறைக்கு எதிராக வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை வழங்கும் தீர்ப்புகளை, உடனுக்குடன் அமல்படுத்தவும், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அதிகாரிகள் ஆஜராகி, நீதிபதிகளின் கேள்விகணைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.கடந்த, 27ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா ஆஜரானார். ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்குவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காததால், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர்.இதில், நீதிபதிகள், பல்வேறு கேள்விகளை எழுப்பியதால், செயலர் சபிதா, நெளிய வேண்டிய நிலை ஏற்பட்டது.தற்போதைய நிலவரப்படி, அரசாணை எண், 216 தொடர்பான வழக்குகள் (ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கான பணப்பலன் வழங்குவது) மற்றும் இதர வழக்குகள் என, 2,000த்திற்கும் அதிகமான வழக்குகள், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியரின் '' டிப்ளமோ '' கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் 9300 + 4200 என 1.1.2006 முதல் மாற்றம் செய்யப்பட்டால் 2009 ல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியருக்கு கிடைக்கும் ஊதிய நிர்ணய மாதிரி பட்டியல் .


பட்டதாரி ஆசிரிய நண்பர்களுக்கும் , TNGTF பொறுப்பாளர்களுக்கும் TNGTF பொதுச்செயலாளரின் செய்தி

பட்டதாரி ஆசிரிய நண்பர்களே, TNGTF பொறுப்பாளர்களே,
********************************************************************************
தொடக்க கல்வித்துறையில் கடந்த 2010ம் ஆண்டு முதல் cps பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. நமது அமைப்பின் தொடர் வலியுறுத்தல் காரணமாக CPS ACCOUNT SLIP கடந்த செப்டம்பர் மாதம் DATA CENTRE லிருந்து தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கும் மாவட்ட கருவூலங்களுக்கும்அனுப்பப் பட்டது தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்திலிருந்து அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் , செப்டமபர் 23ம் தேதி E-MAIL மூலம் அனுப்பப் பட்டது.

DSE - தனி நபர் தகவல் தொகுப்பு முறை(PIS) இணையதளத்தில் பதிவு செய்தல்-பள்ளிகல்வி இயக்குனர் அறிவுரைகள்


DATA TRANSFER என்ற OPTION கிளிக் செய்து தங்கள் பள்ளியிலிருந்து மாறுதல் சென்றவர்களை ,அவர்கள் தற்போது பணியாற்றும் பள்ளிக்கு அவர்களது விவரங்களை மாற்றிக் கொள்ளவும். அதே போன்று தங்கள் பள்ளிக்கு வேறு பள்ளியிலிருந்து பணியாளா்கள் மாறுதல் பெற்று வந்திருந்தால், அவா்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிக்கு தெரிவித்து அவா்களுடைய விவரங்களை மாற்றி கொள்ளவும் . ஒவ்வொரு பணியாளரின் விவரங்களையும் UPDATE செய்யவும்.


SSLC -Mar / Apr - 2015 -Private Application -Press Release Notification

29.10.14 அன்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் - தொடக்க கல்வி இயக்குனருடன் சந்திப்பு கோரிக்கை விபரம் 1


முன்னேற்றுவேம்!    முன்னேறுவோம்!

பட்டதாரி ஆசிரிய நண்பர்களே!

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் ஜான் கென்னடி, மகளிரணிச்செயலாளர் ஜேனட், ஈரோடு மாவட்ட பொருளாளர் தனக்குமார், திண்டுக்கல் மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு ,செயலாள்ர் ஜோசப் சேவியர், அரியலூர் மாவட்டம் ராஜா ஆகியொர் தொடக்க கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோரை கடந்த 29.10.2014 அன்று இயக்குனரகத்தில் சந்தித்து பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


கோரிக்கையின்  சுருக்க விவரம்;


1.     eLãiy¥gŸë jiyik MÁça® gjé ca®Î ;

       eLãiy¥ gŸë¤ jiyik MÁça® gjé ca®Î murhiz v© 166 ehŸ  16/7/1999 go tH§f¥g£L tU»wJ. Ïªj murhizæš jäœehL rh®ãiy gâ bghJé 36 m - é‰F më¡f¥g£LŸs é éy¡if u¤J brŒJ g£ljhç MÁça® Mf ãakd« bg‰wt®fS¡F    K‹Dçik tH§F« tifæš òÂa murhiz btëæl nt©L»nwh«.

 2. ju v© mo¥gilæš K‹Dçik

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தலாம்’; உயர்நீதிமன்றம் உத்தரவு



அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்திக் கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்து உள்ளது. ஆனால், தேர்வை இறுதி செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டு உள்ளது.
 
வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியை சேர்ந்த, கோபி என்பவர், தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. தற்போது, நேரடி தேர்வு மூலம் 4,393 காலியிடங்களை நிரப்புவதற்கு, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 3ம் தேதி அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை

தமிழக மீனவர் 5 பேருக்கு இலங்கையில் மரண தண்டனை தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்


தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை அளித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு. மீனவர்கள் மதுரை இரமேஸ்வரம் ரோட்டில் மறியல் செய்கின்றனர். தமிழர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதி இந்திய அரசு உதவி செய்வதாக அறிவிப்பு இரயில்கள் சென்னையில் மறிப்பு தங்கச்சி மடத்தில் தண்டவாளம் தகர்ப்பு  இலங்கை அதிபர் உருவபொம்மை எரிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு: 3000 பணியிடங்களுடன் புதிய பட்டியல் நவம்பரில் வெளிவர வாய்ப்பு


3000பணி இடங்களுக்கு  நவம்பர் மாதம் புதிய பட்டியல் வெளியாக
உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இவை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களை மட்டும்  கொண்டு நிரப்படுவதாக தகவல்கள் கூறுகிறது. இருப்பினும் 5%மதிப்பெண் தளர்வு மேல்முறையீடு பற்றி அரசு முடிவை பொறுத்து

TNGTF பொதுச்செயலாளர் கோரிக்கை ஏற்பு - CPS account slip வழங்கப்படாத ஆசிரியர்களுக்கு ஒரிரு நாளில் வழங்கப்படும் தொடக்க கல்வி இயக்குனர் உறுதி


TNGTF மாநில பொறுப்பாளர் தகவல்: CPS account slip பல மாவட்டங்களுக்கு தர படவில்லை என்று தொடக்க கல்வி இயக்குனரிடம் நமது பொதுச்செயலாளர் திரு. பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள்  இன்று (29,10,14) நேரில் சந்தித்து பட்டியல் இட்டுள்ளார்.
எனவே இன்னும் ஒரிரு நாளில் அனைத்து மாவட்டங்களுகும் cps account slip  விரைந்து வழங்க  நடவடிக்கை எடுப்பதாக தொடக்க கல்வி இயக்குனர் உறுதியளித்துள்ளார். 

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நவ.,7 வரை விண்ணப்பிக்கலாம்,' என பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



2015 மார்ச்சில் துவங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் பள்ளி மாணவ, மாணவிகளை பற்றிய முழு விபரங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்து பதினான்கரை வயது நிரம்பிய தனித்தேர்வர்களும் இத்தேர்வை எழுதலாம்.

அவர்கள் உரிய அசல் கல்வி, பிறப்பு சான்றிதழ்களுடன் அரசு தேர்வு சேவை மையங்களில், பாடவாரியாக தேர்வுக்குரிய கட்டணத்தை செலுத்தி, நவ.,7க்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம், என பள்ளிக்கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது

சி.பி.எஸ்.இ., பள்ளி விவகாரம் : பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல்


சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற, புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, தமிழக அரசின் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கல்வி விதிமுறைகளில், சில திருத்தங்களை கொண்டு வந்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்க வேண்டும் எனில், பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் என, விதிமுறையில் திருத்தம் கொண்டுவந்து, தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில், நேற்று முன்தினம், சென்னையில் நடந்த பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளி தொடர்பான விதிமுறை திருத்தத்திற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.

(29.10.14) தொடக்க கல்வித் துறை இயக்குனரை சந்தித்து பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்த த.நா.பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்ன்மான்ட் மற்றும் பொறுப்பாளர்கள்ஃ


நான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை

 

பாகிஸ்தானில் அண்மையில் இரட்டை தலைகளுடன் கூடிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆசாத் ஐம்மு மற்றும் கஹ்மீர் தம்பதிகளுக்கு மூன்றாவதாக பிறந்த இக்குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு வாய் மூலம் பால் ஊட்டுவதற்கும் முடியாமல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் இவ்வாறான அதிசய சம்பவங்கள் இடம்பெறுவது தற்போது காணப்படுகின்ற ஒரு வியடம் ஆகிலும்… குறித்த இந்தக்குழந்தைக்கு அவயங்கள் இரண்டு சோடிகளாக காணப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தொடக்கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறலாம்


தொடக்கக் கல்வித்துறையில் அண்மையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றதையடுத்து ஏற்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள், 2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் மற்றும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் கல்விக்கு அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் : தேர்வு மதிப்பீடு முறையில் வருகிறது மாற்றம்

ஆசிரியர் பயிற்சி கல்விக்கு, அடுத்த ஆண்டு, புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் தேர்வு மதிப்பீடு முறையில் மாற்றம், மாணவர்களின் செயல்

வழியிலான அணுகுமுறை திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் உள்ளிட்ட, பல புதிய திட்டங்களை அமல்படுத்த, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
600 பள்ளிகள் :
தமிழகத்தில், 600 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயக் கல்வி அளிக்கப்படுகிறது. இந்த படிப்பை படிப்பவர்கள், ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணி புரியும் தகுதியை பெறுகின்றனர்.
மாணவ சமுதாயத்தின் அடித்தளமாக உள்ள, ஆரம்ப கல்வியை வலுப்படுத்தவும், ஆரம்ப கல்வி கற்பிக்கும் ஆசிரியரை, தரமுள்ளவர்களாக, திறமையானவர்களாக உருவாக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு உருவாக்கிய, 'ஆசிரியர் கல்விக் கொள்கை - 2009'ன் படி, பல மாநிலங்கள், ஆசிரியர் பயிற்சிக்கான பாடத்திட்டங்களை மாற்றி உள்ளன.
கற்பித்தலில் புதிய யுக்தி :
வலுவான பாடத்திட்டம், கற்பிக்கும் முறையில், புதிய யுக்திகள், மாணவர்களை, உளவியல் ரீதியாக அணுகி, சிறப்பான முறையில், கல்வி கற்பித்தல், கற்றல் - கற்பித்தலில், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, கம்ப்யூட்டர் வழியிலான கற்பித்தல் என, பல புதிய திட்டங்கள், புதிய பாட திட்டங்களில் அமல்படுத்தப்படுகின்றன. கேரளாவில், கடந்த ஆண்டு, புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆந்திரா, கர்நாடகாவில், புதிய பாடத் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், வரைவு பாடத் திட்டத்தை தயாரித்துள்ளது. முதல் ஆண்டிற்கு, ஏழு பாடம், இரண்டாவது ஆண்டிற்கு, ஏழு பாடம் என, 14 பாடங்கள் இருக்கின்றன.
வரைவு பாடத்திட்டம் தயார் :
ஒவ்வொரு பாடத்திற்கும், ஐவர் அடங்கிய குழுவை அமைத்து, நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி, அங்குள்ள நிலவரங்களை நேரில் ஆய்வு செய்ய, இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. குழுவினர், பிற மாநிலங்களின் பாடத் திட்டம், கற்பித்தல் முறை, புதிய திட்டங்கள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு, இயக்குனரகத்திற்கு அறிக்கை அளித்தனர். அதனடிப்படையில், தேவையான மாற்றங்கள் செய்து, வரைவு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளித்ததும், பாடத் திட்டம் எழுதும் பணி துவங்கும். அடுத்த ஆண்டு,

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

.
W.P.(MD).NO.19113/2013 - ORDER REG CPS CLICK HERE...

மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து 31.05.2012 -ல் ஓய்வு பெற்றார்.
இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.



அவரிடம் பிடித்தம் செய்த தொகை -ரூபாய் -2,91,900/-இவரை போல பல பேர் இன்னும் ஓய்வூதியம் பெறாமல் உள்ளனர்.இந்த தீர்ப்பை வைத்து பல வழக்கு தொடர்ந்தால் ஓய்வூதியம் பெற முடியும் .

IGNOU B.Ed 2014 Entrance Results

த.நா.பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் அடுத்த வெற்றி - CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் அவர்களின் மறுபணிநியமண காலத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும் என இயக்குனரிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக அரசாணை வெளியீடு




பழைய ஓய்வு ஊதியம் - புதிய ஓய்வு ஊதியம் வேறுபாடுட்டை அறிய கீழே கிளிக் செய்யவும்

அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு & கலந்தாய்வை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி -பள்ளிக்கல்வி இயக்குநர்

. பள்ளிக்கல்வி இயக்குநரின் உறுதியை ஏற்று அக். 29ம் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சாமிசத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: பள்ளிக்கல்வித்துறையால் தரம் உயரும் 50 உயர்நிலைப்பள்ளிகளில் பட்டியலைவெளியிட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி உடனடியாக நேர்மையான முறையில் கலந்தாய்வை நடத்த வேண்டும். தமிழகம் முழுதும் காலியாக உள்ள 600 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடன நிரப்ப வேண்டும். 2 ஆண்டுகள் கடந்தபிறகும் எம்பில்- உயர்நிலைக்கல்விக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் உண்டு என அரசாணையைத்திருத்தி வெளியிட வேண்டும்.
மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 250 -க்கும்மேல்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம்

தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஊதிய விகிதம் திருத்தியமைப்பு -தேர்வு நிலை / சிறப்புநிலை பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதம்தொடர்பான தெளிவுரை

CPS ஒப்புகை சீட்டு (A/C SLIP) தங்கள் ஒன்றியத்தில் வழங்கப்பட்டுவிட்டதா??

தொடக்க கல்வி துறையில் இதுவரை வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் (CPS) 01.04.2003 பின்  நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் (தொடக்க கல்வி துறையில் பணியாற்றும்) அலுவலர்களுக்கு ஒப்புகைசீட்டு          (A/C SLIP) வழங்கப்படாமல் இருந்தது, இதனை மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் கவனத்திற்கு நமது மாநில பொறுப்பாளர்கள் கொண்டு சென்றனர். இயக்குனர் அவர்கள் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஒப்புகை சீட்டு வழங்க 11.09.2014 உத்தரவிட்டார்.இதன் மூலம் அனைத்து கருவுலம் வழியாக உதவி தொடக்க கல்வி அலுலகங்களுக்கு ஒப்புகைசீட்டு குறுந்தகடு (CD) மூலம் அனுப்பப்பட்டது ,இது கிடைக்கப்பெற்று 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவுகள் ஏதேனும் இருப்பின் அல்லது சில நபர்கள் மொத்தமாக பதிவுகள் இல்லை என்றாலும்  உடனே கருவூலம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். அக்காலக்கெடு

தேசியத் திறனாய்வுத் தேர்வு: தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்


தேசியத் திறனாய்வுத் தேர்வுக்கு (என்.டி.எஸ்.இ.) ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் திங்கள்கிழமை முதல் www.tndge.in என்ற இணையதளம் வழியாக பள்ளிக்கு வழங்கப்பட்ட தனி முகவரி மூலம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CLICK HERE DOWNLOAD TO NTSE EXAM HALL TICKET

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு


தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.சரவணக்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நான் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவன். வழக்குரைஞராகப் பயிற்சி செய்து வருகிறேன்.

தமிழ்நாடு அருந்ததியர் சட்டம் 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் மாநில அளவில் உள்ள கல்வி நிறுவனங்களில் (தனியார் கல்வி நிறுவனங்கள் உள்பட) தாழ்த்தப்பட்டோருக்கான 16 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

ஆசிரியர்கள் சிறப்புநிலை குறித்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: கல்வி துறை செயலாளருக்கு நீதிபதிகள் கண்டனம்.


சென்னை ஐகோர்ட்டில், சிரோமணி உட்பட பல ஆசிரியர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தனர். அதில், ‘2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் நீண்ட கால பணி செய்யும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கவேண்டும். ஆனால்,
சில ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டதால், பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீண்ட கால பணி செய்துள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்க உத்தரவிட்டது. ஆனால், ஆசிரியர்கள் சிலருக்கு மட்டுமே சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உள்ளிட்ட

தலைமை ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு.

தமிழகம் முழுவதும் அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெற இருந்த தலைமைஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் 50 
பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்சக்கோரிக்கைகளை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தது.இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள்

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு (27.10.2014 ) திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது.

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு 27.10.2014 திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது. மதிப்பெண் சான்றிதழை தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த செப் டம்பர் மாதம் 25 முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 துணைத்தேர்வை எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித் தேர்வர்கள்உட்பட) மதிப்பெண் சான்றிதழ்களை நாளை (திங்கள் கிழமை) பிற்பகல் 2 மணி முதல், அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது.

பிளஸ்-2 துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் (தட்கல் 

தனித்தேர்வர்கள் உள்பட) தேர்வு முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளியாகிறது. மதிப்பெண் சான்றிதழ்களை நாளை பிற்பகல்2 மணி முதல் அவர்கள் தேர்வு எழுதிய, தேர்வு மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது.விடைத்தாள் நகல் மற்றும் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையத்தில் அக்டோபர் 29-ந் தேதிமுதல் 31-ந் தேதி வரை நேரில் சென்று உரிய கட்டணத்துடன் ஆன்-லைன் பதிவு கட்டணமாக 50 ரூபாயை பணமாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வு துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாள் நகல் களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுக் கூட்டல் முடிவுகள் பற்றி அறிந்து கொள்ளவும் முடியும் என்பதால், ஒப்புகை சீட்டை பாதுகாப்புடன் வைத்திருத்தல் வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பதவி உயர்வு- கலந்தாய்வு

பள்ளிக்கல்வி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட்.,கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் பெற இயலாத நிலையில் எம்.பில் / பி.எச்.டி / பிஜிடிடிஈ இவற்றில் ஏதேனும் 2 கல்வித் தகுதிக்கு இரு ஊக்க ஊதியம் வழங்கும் பட்சத்தில் பயன் பெறக்கூடிய ஆசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு

Tamil Nadu HSC (+2) Exam Timetable 2015

Date Subjects
 


3rd March 2015 Tamil 1st paper
5th March 2015 Tamil 2nd paper
6th March 2015 English 1st paper
7th March 2015 English 2nd paper
10th March 2015 Physics, Economics
13th March 2015 Commerce, Home Science, Geography
14th March 2015 Maths, Zoology, Micro Biology, Nutrition & Dietetics
17th March 2015 Chemistry, Accountancy

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது.