FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

20 சதவீதம் மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாது: அதிர்ச்சி தகவல்

விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில், 20 சதவீதம் மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் வெளியாகி உள்ளது.
இதனிடையே 1 முதல் 5ம்வகுப்புவரை துவக்கப் பள்ளிகளில் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதத்தில் அடிப்படை சரியாக இல்லாததே, பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பில் தேர்ச்சி சதவீதம் குறைய காரணம் என கண்டறியப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளி மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் எழுதும் மற்றும் வாசிக்கும் திறன், கணித அடிப்படை திறன் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
தமிழ் வாசிப்பு, எழுதுதல் திறன்: 2013ல் 641 பள்ளிகளில் 404 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 61,878 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டதில் 60 சதவீத பேருக்கு மட்டுமே தமிழ் வாசிக்கும் திறன் இருந்தது கண்டறியப்பட்டது. 2014ல், 488 பள்ளிகளில் 50,492 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் 73 சதவீதம் பேருக்கு மட்டுமே தமிழ் வாசிக்கும் திறன் இருந்தது தெரியவந்தது.

No comments:

Post a Comment