
இது குறித்து அனைத்து ஆசிரியர் சங்க பொது செயலாளர் கிப்சன் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 129 பேர் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் 80 ஆயிரம் பேர் சாதாரண நிலை ஊதியம் (5200&20200&ஜிபி 2800) பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 1.1.2006 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட 6வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200+2800 = 8000 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200=13500 என வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்பை நீக்கிட 2010ல் ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் குழுவும், 2012ல் அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் 3 நபர் குழுவும் அமைக்கப்பட்டது. ஆயினும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து அனைத்து ஆசிரியர் சங்கம் பல்வேறு ஆதாரங்களை சேகரித்து ஊதிய மாற்றம் செய்ய வலியுறுத்தி, தமிழக நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட பலருக்கு மனு கொடுக்கப்பட்டது.
அந்த ஆதாரங்கள் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் ஊதியம் ரூ.9,300&34,800 தர ஊதியம் 4200 என மாற்றம் செய்திட உத்தரவிடக் கோரி கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்குப் பின்னர், தற்போது, 8 வாரத்திற்குள் ஊதியத்தில் உரிய மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதித்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment